Homeசெய்திகள்சினிமாமீண்டும் பழைய ஸ்டைலுக்கு வரும் எஸ்.ஜே. சூர்யா!

மீண்டும் பழைய ஸ்டைலுக்கு வரும் எஸ்.ஜே. சூர்யா!

-

- Advertisement -

நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஆரம்பத்தில் இயக்குனராக வாலி, குஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து பல படங்களை தானே இயக்கி நடித்து வந்தார். இருப்பினும் அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் நடிப்பதில் மட்டுமே முழு ஆர்வம் செலுத்தி நடித்து வருகிறார். மீண்டும் பழைய ஸ்டைலுக்கு வரும் எஸ்.ஜே. சூர்யா!அதன்படி பல படங்களில் வில்லன் ஆகவும் கலக்கி வருகிறார். தற்போதுள்ள தமிழ் சினிமாவில் வில்லன் என்றாலே நினைவுக்கு வருவது எஸ் ஜே சூர்யா. அந்த அளவிற்கு நடிப்பு அரக்கனாக மாறி பட்டைய கிளப்பி விடுகிறார். அந்த வகையில் மாநாடு, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் எஸ்டி சூர்யாவின் நடிப்பு பெரிதளவும் பேசப்பட்டது. மேலும் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. இந்நிலையில் இவர், தன்னுடைய பழைய ஸ்டைலை மீண்டும் கையில் எடுத்துள்ளார். மீண்டும் பழைய ஸ்டைலுக்கு வரும் எஸ்.ஜே. சூர்யா!அதாவது தன்னுடைய அடுத்த படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடிக்க உள்ளார். இதற்காக ஆறு வருடங்கள் கதை எழுதி வருவதாகவும் விரைவில் அந்த படத்தை தொடங்க இருப்பதால் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் எஸ் ஜே சூர்யா இயக்கி நடிக்க உள்ள புதிய படத்திற்கு கில்லர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ