Homeசெய்திகள்சினிமா'கேங்கர்ஸ்' படத்துல அந்த விஷயம் இல்லன்னு சண்டை போட்டுட்டு இருக்காரு.... வடிவேலு குறித்து சுந்தர்.சி!

‘கேங்கர்ஸ்’ படத்துல அந்த விஷயம் இல்லன்னு சண்டை போட்டுட்டு இருக்காரு…. வடிவேலு குறித்து சுந்தர்.சி!

-

- Advertisement -

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் நகைச்சுவை என்றாலே நம் நினைவுக்கு வருவது வடிவேலு தான்.'கேங்கர்ஸ்' படத்துல அந்த விஷயம் இல்லன்னு சண்டை போட்டுட்டு இருக்காரு.... வடிவேலு குறித்து சுந்தர்.சி! இவருடைய எதார்த்தமான நகைச்சுவை காட்சிகள் இன்றுவரையிலும் பலரின் ஃபேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது. இருப்பினும் சில காலங்கள் பெரும்பாலான படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தின் மூலம் சிறந்த கம்பேக் கொடுத்தார். முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து இவர் மாரீசன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இது தவிர சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேங்கர்ஸ் திரைப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார் வடிவேலு. ஏற்கனவே சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் தலைநகரம், நகரம் போன்ற படங்கள் வெளியான நிலையில் அடுத்தது வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் வடிவேலு லேடி கெட்டப் உள்ளிட்ட பல கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை காமெடியனாக பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 'கேங்கர்ஸ்' படத்துல அந்த விஷயம் இல்லன்னு சண்டை போட்டுட்டு இருக்காரு.... வடிவேலு குறித்து சுந்தர்.சி!சமீபத்தில் வெளியான ட்ரெய்லரிலேயே அதற்கான எதிர்பார்ப்பு அதிகமானது. எனவே கேங்கர்ஸ் திரைப்படத்தின் மூலம் வடிவேலு, ஒரு நகைச்சுவை நடிகனாக மீண்டும் தரமான சம்பவம் செய்வார் இன்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் வடிவேலு வித்தியாசமான பாடல்களை பாடுவதிலும் வல்லவர். அந்த வகையில் எட்டணா இருந்தா, வாடி பொட்ட புள்ள என ஏகப்பட்ட வெற்றி பாடல்களை பாடியுள்ளார். கடைசியாக மாமன்னன் திரைப்படத்திலும் மழையில தான் தீ பிடிக்குது பாடலை பாடியிருந்தார். எனவே கேங்கர்ஸ் படத்திலும் அவர் ஏதாவது பாடலை பாடியிருப்பாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் நடந்த பேட்டியில் சுந்தர்.சி- யிடம் , வடிவேலு கேங்கர்ஸ் படத்தில் பாடல் பாடியிருக்கிறாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சுந்தர்.சி, “இந்த படத்துல என்ன ஏன் பாட விடலன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்காரு” என்று சொன்னார். அதைத்தொடர்ந்து பேசிய வடிவேலு, “சத்தியமா ஆடியன்ஸும் கேக்குறாங்க. இந்தப் படத்துக்குள்ள தான் நான் பாடி இருக்கேன்” என்று பதிலளித்தார்.'கேங்கர்ஸ்' படத்துல அந்த விஷயம் இல்லன்னு சண்டை போட்டுட்டு இருக்காரு.... வடிவேலு குறித்து சுந்தர்.சி!

மேலும் சுந்தர்.சி, “அரண்மனை போன்ற படங்களில் கிளைமாக்ஸில் வரும் பாடலை போல் இந்தப் படத்தில் வடிவேலு ஒரு பாடலைப் பாட வேண்டும் என எல்லாமே பிளான் பண்ணிட்டோம். யோசிக்க எல்லாம் போட்டாச்சு. ஆனா அவரிடம் இத்தனை நாள் கேட்டு நடிக்க வச்சாச்சு. இப்போ ஒரு பாட்டையும் பாடல் ஒன்னு சொல்லி அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என தோணுச்சு. அதனாலதான் அந்த பாட்ட அடுத்த படத்திற்கு இருக்கட்டும் என்று வைத்து விட்டோம். அது முழுக்க முழுக்க இங்கிலீஷ் பாட்டு. தமிழ் எதுவுமே வராது” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி மீண்டும் இணையும் என  நம்பப்படுகிறது.

MUST READ