Homeசெய்திகள்சினிமாமளையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா!

மளையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா!

-

- Advertisement -

சூர்யா 47 படத்தை இயக்க ரோமாஞ்சம், ஆவேசம் பட இயக்குநர் ஜித்து மாதவன் ஒப்பந்தமானதாக தகவல் வெளியாகியுள்ளது.மளையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா!கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ரோமாஞ்சம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜித்து மாதவன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பகத் பாசிலை வைத்து ஆவேசம் திரைப்படத்தை இயக்கி அதுவும் வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் சூர்யாவின் 47 வது திரைப்படத்தை இயக்க ஜித்து மாதவன் ஒப்பந்தமாகியுள்ளார்.

சூர்யா தற்போது ஆர்.ஜே பாலாஜியின் 45 வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியின் புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அப்புறம் தள்ளிப் போகிறது.

இந்த இடைவெளியில் ஜித்து மாதவனுடன் இனிது என்ற புதிய திரைப்படத்தில் நடிக்க நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளார். சூர்யா 47 வது படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருப்பதை கிட்டத்தட்ட உறுதியான நிலையில் இதற்கான திரைக்கதை பணிகளை  மும்முரமாக செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

போதைப் பொருட்களின் புகழலிடமாக மாறிய தமிழகம் ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

MUST READ