தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வரும் கமல்ஹாசன் சிறுவயதிலிருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் அள்ளி இருக்கிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படம் தொடர்பான இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அந்த விழாவில் கமல்ஹாசன், “கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது தான்” என்று கூறியிருந்தார். இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எனவே கர்நாடகாவில் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை தடை செய்யக்கோரி பல்வேறு அரசியல் தலைவர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லையென்றால் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை தடை செய்வோம் எனவும் கூறியுள்ளனர். சூழல் இப்படி இருக்க, கமல்ஹாசன் ஏற்கனவே, “அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. இது என்னை போன்ற அரசியல்வாதிகள் பேச வேண்டிய விஷயம் இல்லை. இதற்கு வல்லுனர்கள் பதில் அளிப்பார்கள்” என்று கூறியிருந்தார்.
#KamalHaasan in Today’s Pressmeet ⭐:
“My love for Karnataka is true.. Nobody will suspect it except those with an agenda.. I’ve been threatened before.. If I’m wrong I’ll apologize.. if I’m not, I won’t.. it’s my lifestyle..” pic.twitter.com/4RPe3RfXjX
— Laxmi Kanth (@iammoviebuff007) May 30, 2025
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய கமல்ஹாசன், “கர்நாடகா மீதான என் காதல் உண்மையானது. சொந்த நோக்கம் கொண்டவர்கள் தவிர வேறு யாரும் அதை சந்தேகிக்க மாட்டார்கள். முன்பு என்னை மிரட்டி இருக்கிறார்கள். நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன். நான் தவறு செய்யவில்லை என்றால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதுதான் என்னுடைய லைஃப் ஸ்டைல்” என்று தெரிவித்துள்ளார்.