Homeசெய்திகள்சினிமாநீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் விஜயகாந்தின் மகன்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் விஜயகாந்தின் மகன்!

-

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சண்முக பாண்டியன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் திரைப்படத்தின் மூலம் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமானவர். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு வெளியான மதுரவீரன் திரைப்படத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து நடித்திருந்தார்.

அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை வால்டர் படத்தில் இயக்குனரான U. அன்பரசன் எழுதி இயக்குகிறார்.

படத்தில் சண்முக பாண்டியன் உடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், கஸ்தூரிராஜா, யாமினி சந்தர் மற்றும் பலர் நடிக்கின்றனர். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் காட்டு யானைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது. முழுக்க முழுக்க காட்டுக்குள் பரபரப்பான திருப்பங்களுடன் புதுமையான திரைக்கதையில் தயாராக உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த், இதன் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் தொடங்கி வைத்துள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் கேரளா, ஒரிசா, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ