spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஒரு கிடாயின் கருணை மனு' பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!

-

- Advertisement -

'ஒரு கிடாயின் கருணை மனு' பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!நடிகர் யோகி பாபு, தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் ஹீரோவாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் ரஜினி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கடைசியாக யோகி பாபு நடிப்பில் தூக்குதுரை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் போட், பூமர் அங்கிள், மேகி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இன்னும் சில படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது சுரேஷ் சங்கையா இயக்கியிருந்த ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதாநாயகனாக நடித்திருந்தார். 'ஒரு கிடாயின் கருணை மனு' பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் யோகி பாபு!கிராமத்து பின்னணியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சுரேஷ் சங்கையா பிரேம்ஜி நடிப்பில் சத்திய சோதனை எனும் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக யோகி பாபு நடிப்பில் சுரேஷ் சங்கையா இயக்க உள்ள புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ