Homeசெய்திகள்க்ரைம்சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராமனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை... சஸ்பெண்ட் செய்யவும் பரிந்துரை!

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராமனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை… சஸ்பெண்ட் செய்யவும் பரிந்துரை!

-

- Advertisement -

சென்னை:

காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை சைரன் வைத்த காரில் கடத்திச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் தனுஷ் தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த விவகாரத்தில் பெண் குடும்பத்தினர் கூலிப் படை மூலமாக இளைஞர் தனுஷின் தம்பியை கடத்தியதாக புகார் எழுந்தது.

கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமனின் அரசு சார்பாக அளிக்கப்பட்ட காரினை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பெண்ணின் குடும்பத்தினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி. குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தியும் சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி விசாரணைக்காக சென்ற போலீசாரை அவரது ஆதரவாளர்கள் 5 மணி நேரமாக தடுத்து நிறுத்தி சனிக்கிழமையன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். வழக்கில் ஆஜராவதற்காக ஏடிஜிபி ஜெயராமன் சீருடையில் வந்த நிலையில், போலீசார் கைது செய்வதற்கு முன்பாக சாதாரண உடைக்கு மாறினார். அ

நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் போலீசார் அவரை திருவாலங்காடு காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுவனின் கடத்தலில் கூட்டுசதி ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது

நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறை ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டு திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதன்பின் ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கைரேகை பதியப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறுவன் கடத்தல் கைதாகியுள்ள ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னரே ஜெயராமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

MUST READ