spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கணவனின் பாலியல் தொல்லை, பிரிந்து சென்ற 4 மனைவிகள்: கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி...

கணவனின் பாலியல் தொல்லை, பிரிந்து சென்ற 4 மனைவிகள்: கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி – கல்லூரி முதல்வர் ராஜினாமா

-

- Advertisement -

கணவனின் பாலியல் தொல்லை பிரிந்து சென்ற 4 மனைவிகள்: கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி - கல்லூரி முதல்வர் ராஜினாமா

கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியமல் பிரிந்து சென்ற 4 மனைவிகள். மருத்துவக் கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது.

we-r-hiring

இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவக் கல்லூரியில் 250 எம்பிபிஎஸ் இடங்களும், 175 முதுநிலை இடங்களும் உள்ளன.

இம்மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (28) கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்க சென்றிருக்கிறார். மறு நாள் காலையில் (ஆகஸ்ட் 9) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அப்பெண்ணின் பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதடு ஆகிய இடங்களில் காயங்கள் இருந்திருக்கின்றன. கழுத்து எலும்பு முறிந்திருக்கிறது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராயை (33) கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். இவருடன் சாபிட்ட மற்ற 4 மருத்துவர்களும் வெளியே சென்றுள்ளனர். பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கணவனின் பாலியல் தொல்லை பிரிந்து சென்ற 4 மனைவிகள்: கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி - கல்லூரி முதல்வர் ராஜினாமா

கருத்தரங்கு கூடத்தில் சிசிடிவி கேமரா இல்லை. ஆனால் மருத்துவமனை வளாகத்தின் இதர பகுதி சிசிடிவி கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். அதில் அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் கருத்தரங்கு கூடத்தில் நுழைந்ததும் (அப்போது அவர், இயர்போனை’ காதில் மாட்டியிருந்தார்) சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு அவர் வெளியேறி இருப்பது தெரியவந்துள்ளது.

வெளியே வந்த அவரது காதில் ‘இயர்போன்’ இல்லை. பின்னர் பெண் மருத்துவரின் உடல் அருகே ‘இயர்போன்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் சஞ்சய் ராயை கைது செய்துள்ளனர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவர் தன்னார்வலராக பணியாற்றி வந்துள்ளார்.
அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் கிடைத்துள்ளது.

கணவனின் பாலியல் தொல்லை பிரிந்து சென்ற 4 மனைவிகள்: கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி - கல்லூரி முதல்வர் ராஜினாமா

அவருக்கு 4 முறை திருமணமாகி இருந்ததும் அவரது பாலியல் தொந்தரவை சமாளிக்க முடியாமல் அனைத்து மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டனர் என கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமையின்போது சஞ்சய் ராயிடம் இருந்து தப்பிக்க பெண் மருத்துவர் தீவிரமாக போராடி இருக்கிறார். குத்து சண்டை வீரரான சஞ்சய், பெண் மருத்துவரை மிக பலமாக தாக்கியுள்ளார். அவர் மீது ஏற்கனவே கொலை, பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் : தேனி போலீஸார்

கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட்-10) இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) வெளியிட்ட அறிக்கையில், “பெண் மருத்துவர் கொலையில் நேர்மையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கணவனின் பாலியல் தொல்லை பிரிந்து சென்ற 4 மனைவிகள்: கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் பலி - கல்லூரி முதல்வர் ராஜினாமா

4 நாட்கள் ஆகியும் மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  பதவி விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் கோஷ், “இறந்து போன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க நான் விரும்பவில்லை” என்று கூறினார்.

ஆக.18-ம் தேதிக்குள் மாநில போலீஸார் வழக்கை முடிக்கத் தவறினால், வழக்கு விசாரணை சிபிஐ-வசம் ஒப்படைக்கப்படும்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

MUST READ