இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்பு
இளம் பெண்களை கவர்வதற்காக அழகான வீட்டு முன்பாக நின்று இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதில் நண்பர்கள் இடையே போட்டி மோதல் ஏற்பட்டதில் வீட்டின் சிசிடிவி கேமரா கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட நான்கு ரீல்ஸ் இளைஞர்களை ரிலாக்ஸாக போலீசார் தூக்கியது எப்படி.

திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஊராட்சிக்கு உட்பட்ட அசோக நந்தவனம் குடியிருப்பில் வசித்து வருபவர் 70 வயதுடைய தாமஸ் இவர் கட்டியிருக்கும் வீடு மிக அழகாக தோற்றம் கொண்டிருப்பதால் சுற்றுபுற பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் டிப் டாப்பான உடை அணிந்து அப்பகுதிக்குச் சென்று வீட்டு முன்பாக நின்று தனது சொந்த வீடு என காட்டிக் கொள்வதற்காக வீடியோ எடுத்தும் இன்ஸ்டா பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்களை கவரும் வகையில் பதிவு செய்வதும் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தாமஸ் தனது குடும்பத்துடன் சென்னை கே கே நகர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றிருந்த நிலையில் அங்கு வழக்கமாக இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதற்காக அருகில் உள்ள குத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், கௌதம், ரவிச்சந்திரன், கார்த்திக் என்ற 4 பேர் அன்றைய தினம் தாமஸ் வீட்டு அருகே புங்கமர நிழல் அமர்ந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்து இருந்துள்ளனர்.

பின்னர் வீட்டில் ஆள் இருக்கிறார்களா என்று கண்காணித்த பின் ஆள் இல்லாதது தெரிய வந்ததால் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி அந்த அழகான வீட்டு முன்பாக நின்று தனது செல்போனில் இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதற்காக வீடியோ பதிவு செய்துள்ளனர்.
அப்போது நண்பர்களுக்கு இடையே யார் முதலில் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்வது வீட்டிற்கு வெளியே சென்றவர் உரிமையாளர் வருவதற்குள் முந்தி இன்ஸ்டா ரீல்ஸ் செய்து முடிப்பதில் நண்பர்களிடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.
பின்னர் நண்பர்களுக்கு இடையே அப்பகுதியில் கைகலப்பு ஏற்பட்டு மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இந்த வீட்டாள்தான் சண்டை வருகிறது இது பெரிய (மயிர் ) விடு எனக்கூறி அருகில் இருந்த கற்களை கொண்டு சரமாரியாக வீட்டின் மீது வீசி உள்ளனர்.
அப்போது வீட்டின் முன் பக்கம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவும் மேலும் அவர் வீட்டில் அருகில் உள்ள கேப்ரியல் என்பவர் தான் வீட்டில் கார் பார்க்கிங் செய்வதற்கான வசதி இல்லாததால் தாமஸ் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடி மீது கற்களை வீசி அடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இது குறித்து கேப்ரியல் என்பவர் வீட்டின் உரிமையாளரான தாமஸ் என்பவருக்கு தொடர்பு எண் கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வந்த தாமஸ் சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு இருப்பதும் வீட்டின் மீது கற்கள் கொண்டு வீசப்பட்டு இருப்பதும் கார் கண்ணாடி உடைந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்.தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவில் பதிவாகி இருந்த ரகளையில் ஈடுபட்ட நபர்களின் உருவங்களை பதிவுகளை சேகரித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் காரின் உரிமையாளர் கேப்ரியல் புகார் அளிக்க அறிவுறுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் வெள்ளவேடு காவல் நிலையத்தில் காரின் உரிமையாளர் புகார் அளித்திருந்த நிலையில் கார் கண்ணாடியும் சிசிடிவி கேமராவில் சேதப்படுத்தியது குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் 24, ரவிச்சந்திரன் 20, கௌதம் 25, கார்த்திக் 22 ஆகிய நான்கு பேர் என்பது தெரிய வந்ததால் வெள்ளவேடு போலீசார் அவர் வீடுகளுக்கு சென்று நாள்வரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் அவர்களை விசாரணை மேற்கொண்டதில் அழகான பெண்ணை கவர்வதற்காக அழகான பெரிய வீட்டை முன்பாக நின்று இன்ஸ்டா ரீல்ஸ் செய்ததாகவும் அப்போது யார் முதலில் இன்ஸ்டா ரீல்ஸ் செய்வது என போட்டி ஏற்பட்டதில் நண்பர்களுக்கு இடையே மோதிக்கொண்டதாகவும் அப்போது இவையெல்லாம் காரணம்.
இந்த அழகான வீடு தானே என கூறிக்கொண்டு சரமாரியாக கற்கள் கொண்டு வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் வீட்டிற்குள் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கற்களை கொண்டு வீசியதாகவும் காவல்துறை விசாரணையில் அவர்கள் கூறியுள்ளனர்
அதைத் தொடர்ந்து அவர்களை வெள்ளவேடு போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் மத்திய புழல் சிறையில் அடைத்தனர். இளம் பெண்களை கவர்வதற்காக அழகான வீட்டு முன்பாக நின்று இன்ஸ்டா ரீல்ஸ் செய்வதில் நண்பர் இடையே ஏற்பட்ட போட்டி மோதலில் வீட்டின் சிசிடிவி கேமரா கார் கண்ணாடி உடைத்த வழக்கில் நான்கு இளைஞர்களை வெள்ளவேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.