spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மருத்துவ சீட்டு வாங்கிதறுவதாக பல லட்சம் சுருட்டிய நபர் கைது

மருத்துவ சீட்டு வாங்கிதறுவதாக பல லட்சம் சுருட்டிய நபர் கைது

-

- Advertisement -
kadalkanni

வெளி மாநில மருத்துவ கல்லூரியில் M.B.B.S. சீட்டு வாங்கி தருவதாக கூறி 71.63 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை ஆந்திர மாநிலம், ஓங்கோலில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.மருத்துவ சீட்டு வாங்கிதறுவதாக பல லட்சம் சுருட்டிய செய்த நபர் கைது

சென்னை காவல் ஆணையாளிடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கொடுத்த புகாரில், கடந்த 2021ம் ஆண்டு சியோன் ஆன்லைன் சேவை நடத்தி வந்த நெல்லூரை சேர்ந்த  வடலபள்ளி விஜயகுமார் என்பவர் வெளிமாநில தனியார் மருத்துவ கல்லூரியில் தனது மகளுக்கு எம்பிபிஎஸ் சீட்டு வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாண்டிசேரி மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் M.B.B.S. சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.71.63 லட்சம் பெற்றுக்கொண்டு சீட்டு வாங்கி தராமல் ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு EDF-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில்  வடலபள்ளி விஜயகுமார் என்பவர் மருத்துவ கல்லூரியில் M.B.B.S. சீட்டு வாங்கி தருவதாக கூறி பல பேரை ஏமாற்றியதும், அவர் மீது நெல்லூர் வேதபாளையம் காவல் நிலையத்திலும் தர்காமிட்டா காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு,  வடலபள்ளி விஜயகுமார் தலைமறைவாக இருந்து வந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து வடலபள்ளி விஜயகுமாரை கைது செய்ய , மத்திய குற்றப்பிரிவு போலிசார் தனிப்படை அமைத்து தேடினர். தேடியதில் வடலபள்ளி விஜயகுமாரை(39), ஓங்கோல், ஆந்திராபிரதேசம் மாநிலத்தில் கைது செய்து  நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்..

பொது மக்கள் இது போன்று மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக மோசடி செய்யும் நபர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!

 

MUST READ