spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஈரோட்டில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட தொழிலாளி வாய்க்காலில் தள்ளி கொலை -  இருவர் கைது!

ஈரோட்டில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட தொழிலாளி வாய்க்காலில் தள்ளி கொலை –  இருவர் கைது!

-

- Advertisement -

கோபி அருகே உள்ள திங்களூரில் மாயமான மில்லில் கொலை. கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் வாய்க்காலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள திங்களூர் கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி மகன் யுவராஜ். 39 வயதான யுவராஜூக்கு திருமணமாகாத நிலையில், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள தனியார் மில்லில் மெசின் ஆபரேட்டராக  வேலை செய்து வந்துள்ளார்.

we-r-hiring

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி கோயில் திருவிழாவிற்கு செல்வதற்காக வெள்ளாங்கோயிலில் உள்ள ஏடிஎம்மிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக அவரது தாயார் ராமாயாளிடம் கூறிச்சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாத நிலையில் தாயார் ராமாயாள், மகனை செல்போனில் தொடர்பு கொண்ட போது சிறிது நேரத்தில் வருவதாக கூறிய யுவராஜ் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் மகன் கிடைக்காத நிலையில் ராமாயாள் அளித்த புகாரின் அடிப்படையில் திங்களூர் போலீசார், யுவராஜ் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து  தேடி வந்தனர்.

இந்நிலையில் யுவராஜ் வாய்க்காலில் தள்ளி கொலை செய்யப்பட்டதாக அப்பகுதியில் உள்ள மதுக்கடையில் இருவர் பேசிக்கொண்டு இருப்பதாக திங்களூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் யுவராஜ் வாய்க்காலில் தள்ளி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் தங்கராசு(40). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

ஈரோட்டில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட தொழிலாளி வாய்க்காலில் தள்ளி கொலை -  இருவர் கைது!தங்கராசு, கடந்த ஆண்டு யுவராஜிடம் சொந்த செலவிற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் கடனாக பெற்று உள்ளார். சில நாட்களில் கொடுப்பதாக கூறி பெற்ற கடன் தொகையை பல மாதங்கள் ஆகியும் திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் யுவராஜ் அடிக்கடி கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், அதே பகுதியை சேர்ந்த பூவேந்திரன்(45) என்பவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து இருவரும் யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர். சம்பவத்தன்று ஏடிஎம் சென்ற யுவராஜை, மது அருந்தலாம் எனக்கூறி திங்களூர் அருகே உள்ள நிச்சாம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலுக்கு அழைத்து சென்று உள்ளனர்.

அங்கு சென்றதும், தங்கராஜூம், பூவேந்திரனும் சேர்ந்து யுவராஜை, கீழ்பவானி வாய்க்காலில் தள்ளி உள்ளனர். நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் மூழ்கிய யுவராஜ் உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து யுவராஜை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த தங்கராஜ் மற்றும் பூவேந்திரனை திங்களூர் போலீசார் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். கொடுத்த கடனை திரும்ப கேட்ட மில் தொழிலாளியை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த சம்பவம் திங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

MUST READ