spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்60ரூபாய் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 27ஆண்டுகளுக்குபின் - கைது

60ரூபாய் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 27ஆண்டுகளுக்குபின் – கைது

-

- Advertisement -

மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997ஆம் ஆண்டில் 60ரூபாயை வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் திடிரென தலைமறைவானார். இவர் மீது நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

60ரூபாய் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 27ஆண்டுகளுக்குபின் - கைது

we-r-hiring

இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை பிடித்து வழக்கு விசாரணைகளை முடிப்பதறகான நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரை மாநகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படை போலீசார் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வசிப்பதாக தகவல் தெரியவந்தது இதனையடுத்து மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வதாக கூறி பன்னீர்செல்வம் குடும்பத்தினரிடம் பெயர், விபரங்களை கேட்டு உறுதிசெய்தனர். இதைதொடர்ந்து சிவகாசியில் ஒயின் ஷாப் ஒன்றில் பணிபுரிந்துவந்த பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சொத்து தகராறு – தாயை கொலை செய்ய முயற்சி

MUST READ