மதுபோதையில் தாக்கியதாக பின்னணி பாடகர் மனோவின் மகன் உள்ளிட்ட 5 பேர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார்
சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் மற்றும் மதுரவாயிலை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி முடிந்து அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளனர் அப்போது பின்னணி பாடகர் மனோவின் மகன் உட்பட 5 பேர் மது போதையில் கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவனிடம் தகராறு செய்து அடித்ததாக கூறப்படுகின்றது.
இதில் கிருபாகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சிறுவனுக்கும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கிருபாகரன் கிழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் சென்னை வளசரவாக்கம் காவல் காவல்துறையினர் விசாரணைக்காக பாடகர் மனோவின் மகன் உள்ளிடோரை காவல் நிலையம் அளித்துள்ளனர்.தொடர்ந்து விசாரணை செய்தால் தான் யார் மீது தவறு என தெரிய வரும்.