Homeசெய்திகள்க்ரைம்நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக மோசடி - அதிமுக மாவட்ட செயலாளர் மீது...

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக மோசடி – அதிமுக மாவட்ட செயலாளர் மீது புகார்.

-

- Advertisement -

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறி அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தன்னிடம் ஒரு கோடியே 60 லட்சம் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக மோசடி - அதிமுக மாவட்ட செயலாளர் மீது புகார்.அதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற 20 ஆண்டு காலத்தில் யாரிடமும் ஒரு பைசா கூட பணம் பெற்றதில்லை என்றும் அதிமுக நிர்வாகி கிருஷ்ணன் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நூற்றுக்கு நூற்று ஐம்பது சதவீதம் தவறானது என்றும் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மறுப்பு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தனக்கு சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு ரூபாய் ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு தனக்கு வாய்ப்பு வழங்காமல் வேறொரு நபருக்கு வாய்ப்பு வழங்கியதாகவும், இந்த நிலையில் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத நிலையில் தான் வழங்கிய பணத்தை திரும்பி வழங்குமாறு அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன் பலமுறை கேட்டபோதும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக தான் போட்டியிட்டதால் அதிகம் செலவு செய்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்ததால் சிறிது காலம் கழித்து பணம் தருகின்றேன் எனக் கூறி தொடர்ந்து தட்டிக் கழித்து வந்துள்ளார். மேலும் சிறிது காலம் கழித்து கிருஷ்ணனும் அவரது மனைவியும் குமரகுரு வீட்டிற்கு சென்று கேட்டபோது குமரகுரு கிருஷ்ணனை தாக்கியதாகவும் அதில் நெஞ்சுவலி ஏற்பட்டு கிருஷ்ணன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த நிலையில் தலைமை கழகத்தின் அறிவுறுத்தலின்படி எந்த விதமான புகார் அளிக்காமல் கிருஷ்ணன் இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக அதிமுக தலைமை கழகத்தில் கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, கிருஷ்ணனையும் குமரகுருவையும் நேரில் அழைத்து விசாரித்ததாகவும் அதன் பின்னர் குமரகுரு தனக்கு பணத்தை திரும்ப தரவில்லை என்றும் கட்சி தலைமையில் புகார் அளித்ததால் பணத்தை திரும்பத் தர முடியாது எனவும் பணத்தை வழங்கியதற்கு உன்னிடம் போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று மிரட்டும் தோணியில் கூறி வருவதாகவும் பல்வேறு இடங்களில் பணத்தை கடனாக பெற்று மூன்று தவணையாக கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் ஒரு கோடியே அறுவது லட்ச ரூபாய் பணத்தை வழங்கியுள்ளதாகவும் கடன்காரர்கள் தன்னிடம் பணத்தை கேட்டு நெருக்கடி தருவதாகவும், கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தன்னிடம் ஏமாற்றி பெற்ற பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறும் தன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி கொலைவிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன் இன்று நேரில் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் அந்தப் புகார் மனுவில் தனது குடும்பத்தினருக்கும் தனக்கும் ஏதேனும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அதிமுக மாவட்ட செயலாளர். குமரகுரு மற்றும் அவரது மகன் நமச்சிவாயம் ஆகியோர் தான் பொறுப்பாவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது 20 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இதுவரை எந்த நிர்வாகியிடமும் ஒரு பைசா கூட பணம் பெற்றது இல்லை என்றும், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உமாசங்கர் கிருஷ்ணன் மற்றும் பாக்யராஜ் ஆகிய மூன்று பேரை தலைமை கழகத்திற்கு பரிந்துரை செய்ததாகவும் தலைமை கழகம் தேர்வு செய்யும் நபரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாகவும் மேலும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் எனது கட்டுப்பாட்டில் இரண்டு சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே உள்ளதாகவும் நான்கு சட்டமன்ற தொகுதிகள் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மற்றும் அதிமுக தலைமை கழகத்தின் சார்பாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பாக்யராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாகவும் இதுவரை தனது அரசியல் வாழ்வில் யாரையும் நான் அடித்ததில்லை என்றும் நான் பணம் பெற்று ஏமாற்றியதாகவும் அடித்ததாகவும் அதிமுக நிர்வாகி கிருஷ்ணன் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தன் மீது அளித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நூற்றுக்கு 150 சதவீதம் தவறானவை என்றும் அதிமுக நிர்வாகி கிருஷ்ணன் மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வைத்த குற்றசாட்டிற்கு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

MUST READ