Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் மீண்டும் பள்ளி மாணவனை நாய் கடித்தது

சென்னையில் மீண்டும் பள்ளி மாணவனை நாய் கடித்தது

-

- Advertisement -

சென்னையில் மீண்டும் ராட்வீலர் நாய் கடித்து பள்ளி மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் மீண்டும் பள்ளி மாணவனை நாய் கடித்துகொளத்தூர் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு என்ற மாணவர் தனது பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த போது ராட்வீலர் நாய் ஜெரால்டை கொடூரமாக கடித்து உதறி உள்ளது. இதனால் காது முதுகு கண்ணம் தலை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

சென்னையில் மீண்டும் பள்ளி மாணவனை நாய் கடித்துஜெரால்டின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தந்தை கடித்துக் கொண்டிருந்த ராட்வீலர் நாயிடம் இருந்து மகனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சென்னையில் மீண்டும் பள்ளி மாணவனை நாய் கடித்துமருத்துவர்கள் ஜெரால்டுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் தொடர்ந்து ராட்வீலர் நாய்களால் குழந்தைகள் சிறுவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ