- Advertisement -
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், காதலர்களிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறித்து சென்றவர்கள் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவு.
போலீஸ் என கூறி பொது இடங்களில் காதலர்களிடம் பணம், நகை பெற்று செல்வது தற்போது வாடிக்கையாக இருந்து வருகிறது.
பாண்டி என்பவர், மீன்பிடிப்பதற்காக சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது ஒருவர் அங்கிருந்த காதலர்களிடம், போலீஸ் எனக் கூறி மிரட்டி பணம் பறித்து சென்றதை கவனித்து, இது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாண்டி என்பவர் கடற்கரையில் நடந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டதை தொடர்ந்து சென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு மற்றும் சாஸ்திரி நகர் போலீசார் அவரது பதிவிற்கு விளக்கம் கேட்டு தொடர் விசாரணை நடத்தி வருகிறனர்.