Homeசெய்திகள்க்ரைம்காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை - ஐந்து ரவுடிகள் கைது

காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை – ஐந்து ரவுடிகள் கைது

-

காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை – ஐந்து ரவுடிகள் கைது

சென்னை காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை குற்றவாளியை பழி தீர்க்க வந்த ஐந்து ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆறு பட்டாக்கத்திகள் நான்கு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை - ஐந்து ரவுடிகள் கைது

கடந்த 2022 ஆம் ஆண்டு புது வண்ணாரப்பேட்டையில் கொலை செய்யப்பட்ட ஜீவன் குமார் என்பவரின் கூட்டாளிகளுக்கும் தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றவாளி குள்ள கார்த்தி என்பவரின் கூட்டாளிகளுக்கும் அடிக்கடி பழித்தீர்க்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக முன் விரோதமாக குள்ள கார்த்திக் கூட்டாளியான நரேஷ் என்கிற நரேஷ் குமார் என்பவரை பழி தீர்க்க ஐந்து பேர் கொண்ட கும்பல் பட்டாகத்தியுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காசிமேடு நாகூரான் தோட்டத்தில் உள்ள நரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.

காசிமேட்டில் முன் விரோதம் காரணமாக கொலை - ஐந்து ரவுடிகள் கைது

அங்கு நரேஷ் இல்லாததால் அருகிலுள்ள பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடியதால் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதனை அடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு போலீசார் விசாரணையில் காசிமேடு புதுமனை குப்பத்தை சேர்ந்த திரேஷ் என்கிற வெள்ளை திரேஷ் M/21, புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த சீனிவாசன் M/20, புது வண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்த ராகுல் M/20, புது வண்ணாரப்பேட்டை விக்னேஷ் M/27, கொடுங்கையூரை சேர்ந்த சந்தோஷ் என்கிற மயிலு M/21 உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து அவர்களிடமிருந்து
6 கத்திகள் மற்றும் 4 செல்போன்கள் கைப்பற்றி காசிமேடு துறைமுக போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ