காதல் திருமணம் விவகாரத்தில் ஆள் கடத்தல் வழக்கில் காவல் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள பெண்ணின் தந்தை வனராஜா உட்பட 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனுக்கு எந்த வகையில் தொடர்பு உள்ளது என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா ஸ்ரீ என்ற இளம் பெண்ணும் காதலித்து ஏப்ரல் 15ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டு தலைமறைவாயினர். திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை பிரித்து அழைத்துச் செல்ல புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த மாதம் 7 ந்தேதி அதிகாலை தனுஷின் தம்பியான இந்திரச்சந்த் என்பவரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்திச் சென்று அவர் அண்ணன் இருப்பிடம் கேட்டு பின்னர் அவரை விட்டனர், இது தொடர்பாக தனுஷின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் விஜயஸ்ரீ தந்தை வனராஜா மற்றும் கணேசன், மணிகண்டன் விருப்ப ஓய்வு பெற்ற எஸ்ஐ மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சரத்குமார் ,மகேஸ்வரியிடம் நடத்தப்பட்ட விசாரணை நடத்தியதில் ஆள் கடத்தல் வழக்கில் மூளையாக பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி.ஜெயராமன் செயல்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க இருவரும் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் ஏ.டி.ஜி.பி.ஜெயராமன் கைது உத்தரவை ரத்து செய்தும் ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமின் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் திருவள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு இருப்பதால் சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை ஆரம்ப கட்டத்தில் முதல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
புகார் அளித்த லட்சுமி மற்றும் திருமணம் செய்து கொண்ட தனுஷ், விஜயா ஸ்ரீ ஆகியவரிடம் போலீசார் விசாரணை முடித்துள்ள நிலையில் இந்த வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள விஜயஸ்ரீ தந்தையான வனராஜா மற்றும் மணிகண்டன் ,கணேசன், விருப்பு ஓய்வு பெற்ற எஸ்ஐ மகேஸ்வரி ,வழக்கறிஞர் சரத்குமார், ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தது.
இதனைதொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள கடந்த வாரம் மனு அளித்தனர். அத்தகைய மனு மீதான விசாரணை திருவள்ளூர் நீதித்துறை ஒன்றின் நடுவர் சுனில் வினோத் முன்பு விசாரணைக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் ஐந்து பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சி.பி.சி.ஐ.டி நேற்று விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர், ஐந்து பேரையும் நேற்று மாலை 5:50 முதல் நாளை மாலை 5:50 இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த விருப்பு ஓய்வு பெற்ற எஸ்ஐ மகேஸ்வரி மற்றும் பெண்ணின் தந்தை வனராஜா ஆகியோர் முகத்தை கைதுண்டு மற்றும் பேப்பரால் மறைத்து கொண்டும் வாகனத்தில் ஏறினார்கள்.
ஐந்து பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை மேற்கொள்ள திருவள்ளூர் பெரிய குப்பத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு அழைத்துச் சென்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் சரக சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் வீடியோ பதிவுடன் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் ஏற்கனவே திருவாலங்காடு போலீசார் ஜெகன் மூர்த்திக்கும் ஏ.டி.ஜி.பிக்கும் தொடர்பு இருப்பதாக சேகரித்துள்ள சிசிடிவி காட்சிகள் செல்போன் தரவுகள் ஆவணங்கள் வைத்தும் பூவை.ஜெகன் மூர்த்திக்கும் மற்றும் ஏ.டி.ஜி.பி.ஜெயராமனுக்கும் எந்த வகையில் சம்பந்தம் உள்ளது. காதலன் தம்பியை எதற்காக கடத்தினார்கள், ஜெகன்மூர்த்திக்கும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனுக்கும் தொடர்பு உள்ளதா எனவும், பணப்பரி மாற்றங்கள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா எனபது குறித்து வேலூர் சி.பி.சி.ஐ.டி பொறுப்பு அதிகாரியான டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் ஒவ்வொருவரையும் தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அழைத்து வந்த 5 பேரிடம் இரண்டு நாட்களாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன் விசாரணையில் அடுத்த கட்டமாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி மற்றும் ஏ.டி.ஜி.பி.ஜெயராமனுக்கு சமன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடியின் அவதூறு கருத்துக்கு மாணவர்களின் பெற்றோர்கள் பதிலடி…