- Advertisement -
கும்பகோணம் மாவட்டம் சோழபுரம் அருகே ஐயாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் (25). இவா் கும்பகோணத்தில் தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.
கடந்த 12 ஆம் தேதி இரவு தனியார் மருந்தகத்தில் பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த புகாரினை தொடர்ந்து சோழபுரம் காவல் நிலையத்தார் தேடி வந்துள்ளனா். இன்று அதிகாலை கோகுலின் உடல் கோவிலாச்சேரி சுடுகாடு அருகே அவரின் உடல் பகுதியாக எறிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சோழபுரம் காவல் நிலையத்தார் இரண்டு நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.