Homeசெய்திகள்க்ரைம்பள்ளி மாணவிகளை முதியவர்களின் காம பசிக்கு இறையாக்கிய நதியா

பள்ளி மாணவிகளை முதியவர்களின் காம பசிக்கு இறையாக்கிய நதியா

-

 

பள்ளி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் கருக்கா வினோத்துக்கு தொடர் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் என்ன ?

பள்ளி மாணவிகளை முதியவர்களின் காம பசிக்கு இறையாக்கிய நதியா

கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரவுடி கருக்கா வினோத். இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு (NIA – NATIONAL INVESTIGATION AGENCY) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளி மாணவிகளை முதியவர்களின் ம பசிக்கு இறையாக்கிய நதியா

கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை சம்பவத்திற்கு முன் சென்னையில் உள்ள தமிழக பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி கைதானார். பின்னர் சென்னை புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில்  இருந்த போது POPULAR FRONT OF INDIA  என்ற தடை செய்யப்பட்ட அமைப்புடன் கருக்கா வினோத் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகயுள்ளது. இதனை அறிந்த NIA விசாரணையை தீவிர படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிகளை முதியவர்களின் ம பசிக்கு இறையாக்கிய நதியா

முன்னதாக பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவரை ஜாமினின் எடுத்தது யார்?

யார் இவருக்கு பின்னால் என்ற ஐயத்துடன் NIA விடாது விசாரனை செய்து வந்தனர்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழை எளிய பள்ளி மாணவிகளை அவர்களின் குடும்ப வறுமை சூழலை காரணம் காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் தரகர்கள் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இரண்டு பாலியல் பெண் தரகர்கள் மாணவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி முதியவர்களின் காம பசிக்கு இறையாக்கிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒன்றும் அறியாத பள்ளி பயிலும் மாணவிகளிடம் ரூ.500 – ரூ.1000 என தந்து அவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

அதே இவர்கள் இருவரும் முதியவர்களிடம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை விலை பேசி சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பி வந்துள்ளனர்.

இதற்கும் கருக்கா வினோத் குறித்தான NIA விசாரணைக்கும் என்ன தொடர்பு ?

பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோதை ஜாமினில் எடுத்தது யார்?

தமிழக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

பின்னணியை அறிய போராடிய NIA , இறுதியாக கறுக்கா வினோதை நதியா என்ற பெண் பாலியல் தரகர் ஜாமினில் எடுத்ததை கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நதியாவின் வீட்டிற்குள் NIA அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. அப்போது அவர் செல்போனில் இருந்த பள்ளி மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் மூலமாக பள்ளி சிறுமிகளை நதியா பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது வெட்ட வெளிச்சமானது.

இந்நிலையில் NIA அளித்த தகவலின் அடிப்படையில் நதியா மற்றும் அவரின் கணவர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

தனது தொழிலுக்கு ரவுடி அவசியம் என எண்ணி  நதியா அதற்காக கருக்கா வினோதை தேர்ந்தெடுத்து அவரின் மேற்பார்வையில் பாலியல் தொழில் நடந்தி வந்திருப்பதாக தெரியவந்தது. மேலும் நதியா தான் கருக்கா வினோதை ஜாமினில் எடுத்ததுள்ளார் என்பதையும் அறிந்தனர் NIA அதிகாரிகள்.

பள்ளி மாணவிகளை முதியவர்களின் ம பசிக்கு இறையாக்கிய நதியா

NIA அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில்  நதியா ,அவரது கணவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

MUST READ