spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பொன்னேரி செயின் பறிப்பு வெளியான சிசிடிவி காட்சி

பொன்னேரி செயின் பறிப்பு வெளியான சிசிடிவி காட்சி

-

- Advertisement -

பொன்னேரி அருகே கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த கலைச்செல்வி சயனாவரம் பகுதியில் உள்ள கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கடையில் பொருள் வாங்குவது போல வந்த நபர் ஒருவர் கலைச்செல்வியின் பின்னால் இருந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தாலி சங்கிலியை அறுத்துக் கொண்டு வேகமாக தப்பி ஓட்டம் பிடித்தார்.

we-r-hiring

அங்கிருந்தவர்கள் சுதாரித்து துரத்தியும் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கலைச்செல்வி பொன்னேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய செயின் பறிப்பு திருடனை தேடி வருகின்றனர்.

செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் சாந்தி என்ற பெண்ணின் கடையில் பொருட்கள் வாங்குவது போல வந்த மர்ம நபர் 1.5 சவரன் தங்க சங்கிலி பறித்து சென்றார்.

இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ