Homeசெய்திகள்க்ரைம்சின்னசேலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி இருவர் படுகாயம்

சின்னசேலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி இருவர் படுகாயம்

-

சின்னசேலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி இருவர் படுகாயம்

போதைப்பொருள் கடத்திச் சென்ற கார் மோதி இருவர் படுகாயம் கள்ளக்குறிச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் காரை நிறுத்திவிட்டு சென்ற போதைப்பொருள் கும்பல்.

சின்னசேலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி இருவர் படுகாயம்
சின்னசேலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குரல் மும்முனை சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது  கார் மோதி இருவர் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருச்சகர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் வலைவீசி தேடிவந்த நிலையில் சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூண்டி கிராம எல்லையில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக காரை  நிறுத்திவிட்டு காரில் வந்த கும்பல் தப்பித்து விட்டனர்.

இந்த சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காரில் சோதனை செய்தபோது விலை உயர்ந்த போதைப் பொருட்கள் உள்ளே இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் காரில் வண்டியின் ஆர் சி புக்,  ஆதார் கார்டு இருந்தது. அந்த ஆதார் கார்டில் சின்னசேலம் மூங்கில் பாடி சாலையில் வசித்து வருவதாகவும் ஆதார் கார்டு இருந்தது.  இந்த கார் குஜராத் மாநிலைத்தை சேர்ந்தது என்றும் ஆதார் கார்டில் சின்னசேலத்தை சேர்ந்த முகவரி உள்ளதும், அவர் பெயர் அஜாராம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் போதைப்பொருள் கடத்தி விட்டு வேகமாக வந்த போது விபத்து ஏற்பட்டதால் பயத்தில் இங்கே வந்து காரை நிறுத்திவிட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ