ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் நாகேந்திரன் அளித்த வாக்குமூலம் வெளியே கசிந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ம் தேதி சென்னையில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் வடசென்னை ரவுடி நாகேந்திரன், அவனுடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் திருவேங்கடம் , சீசிங் ராஜா ஆகிய இருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். மீதி 28 பேரை சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பவம் செந்தில் தலைமறைவாக இருந்து வருகிறார். சம்பவம் செந்தில் இந்த கொலையில் A2 அக்யூஸ்டாக இருந்தாலும் அவனை மட்டும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் A1 குற்றவாளி நாகேந்திரன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கான செலவை நானே பார்த்துக் கொள்வதாகக் நாகேந்திரன் ஒப்புக்கொண்டது வெளியாகியுள்ளது.
மேலும் எனது மகன் அரசியலில் வளர்வதை ஆம்ஸ்ட்ராங்கிற்கு பிடிக்கவில்லை என்பதனால் சிறையில் இருந்தவாறே ஆர்ம்ஸ்ட்ராங்கை எச்சரித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டத்துடன் நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனை வழக்கறிஞர் அருள் அணுகி பேசியதாகவும், அதில் ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டம் குறித்து வழக்கறிஞர் அருள் கூறியதாக எனது மகன் அஸ்வத்தாமன் என்னிடம் கூறினார் என்று நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்த போது எனது மகன் என்னை சந்தித்து விரிவாக கூறினார். அப்போது இது தான் நல்ல சான்ஸ் அவுனுங்கள செய்யச் சொல்லு, செலவை நாம பார்த்துக்கலாம் என நாகேந்திரன் கூறியதாகவும் வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டு முடிக்க வேண்டும், அதற்கு என்ன செலவானாலும் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் ஐஓசி காண்ட்ராக்டர் ஜெயபிரகாஷை துப்பாக்கியை காட்டி அஸ்வத்தம்மன் மிரட்டிய விவகாரத்தில் கைது செய்ய ஆம்ஸ்ட்ராங் தான் காரணம், என்பதால் எனக்கு ஆம்ஸ்ட்ராங் மீது கடும் கோபம் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளரை அழைத்து “எனது மகனுக்கு எதாவது ஆச்சுனா நான் எந்த லெவலுக்கும் போவேன் ” என எச்சரித்தேன்…
தனது மகன் அஸ்வத்தாமன் அரசியலில் மேலே வராமல் இருக்க ஆர்ம்ஸ்ட்ராங் தான் காரணம் எனவும் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போலிஸிடம் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.