spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி

-

- Advertisement -

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி

பண்ருட்டி அருகே குடித்துவிட்டு வீட்டில் சண்டை போட்ட கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை : இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம்..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நெய்வேலியில் உள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 39). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பண்ருட்டி முத்தாண்டிகுப்பம் அடுத்த செம்மங்குப்பம் ஊரைச் சேர்ந்த சந்தியாவிற்கும் (வயது 29) திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. ராமமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில் ஆத்திரமடைந்த சந்தியா, குழந்தைகளை அழைத்துக் கொண்டு செம்மாங்குப்பத்திற்கு சென்றுவிட்டார்.

we-r-hiring

இந்நிலையில் இன்று சந்தியாவை தேடி ராமமூர்த்தி செம்மாங்குப்பத்திற்கு சென்றுள்ளார். குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழுமாறும் கேட்டுள்ளார். இதில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த கயிறை எடுத்த சந்தியாவும், சந்தியாவின் தந்தை ராமமூர்த்தி உதவியுடன், ராமமூர்த்தியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ராமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா செம்மாங்குப்பத்திற்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரனை நடத்தினார்.

ராமமூர்த்தியின் மனைவி சந்தியாவும் அவருடைய தந்தை ராம்மூர்த்தியையும் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார் சந்தியாவும், சந்தியாவின் தந்தை ராமமூர்த்தியும் கொலை செய்யப்பட்டதை ஒப்பு கொண்டனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டன பிறகு அவர்கள் இருவரையும் கைது செய்யப்பட்ட கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைந்தனர். குடிகார கணவனை மனைவியும் மாமனாரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ