கார் ஓட்டுநரை மிரட்டிய காட்டு யானை! அலறி அடித்து தப்பித்த டிரைவர்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று காரை வழிமறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது. இரவு நேரத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி அலைந்து பொது மக்களை அச்சுறுத்துவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு கோத்தகிரி மலை பாதையில் திடீரென காட்டு யானை ஒன்று காரை வழிமறித்து நின்று தனது தும்பிக்கையால் தாக்கியது. வாகனத்தின் முன்பகுதியை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது.
இதனால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுனர் காரை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இதன் காரணமாக மற்ற வாகனங்கள் பாதி வழியிலேயே திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதுCar diver .