Homeசெய்திகள்இந்தியாஆனந்த் அம்பானி உருக்கமாகப் பேசியதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத முகேஷ் அம்பானி!

ஆனந்த் அம்பானி உருக்கமாகப் பேசியதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத முகேஷ் அம்பானி!

-

 

ஆனந்த் அம்பானி உருக்கமாகப் பேசியதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத முகேஷ் அம்பானி!

பிரபல தொழிலதிபர் அம்பானி தனது கடைசி மகன் திருமணத்தின் முந்தைய நிகழ்ச்சிகளின் போது தேம்பி தேம்பி அழுதிருக்கிறார்.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

ஜியோ ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா, குஜராத் மாநிலம், ஜாம்நகரில் திருமணத்திற்கான நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றனர். இதற்காக, பிரபல தொழிலதிபர்கள் சர்வதேச நாடுகளின் அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என ஜாம்நகர் முழுவதும் வி.ஐ.பி.க்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த நிலையில், நிகழ்ச்சியின் போது ஆனந்த் அம்பானி பேசியதை அவரது தந்தை முகேஷ் அம்பானி கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதிருக்கிறார். சிறு வயதில் தான் அனுபவித்த பிரச்சனைகள் குறித்து ஆனந்த் அம்பானி உருக்கமாக பேசினார்.

தனக்காக தன்னுடைய குடும்பத்தினர் பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறார்கள். தனது வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல என்றும், முட்கள் நிறைந்த வலியை தான் அனுபவித்தேன் என்று தெரிவித்தார். சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்ததாகக் கூறிய ஆனந்த் அம்பானி, தன்னுடைய அப்பா- அம்மா இருவரும் ஒருநாளும் விடாமல் கவனித்துக் கொண்டனர்.

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

ஆனந்த் அம்பானி உருக்கமாகப் பேசியதைக் கேட்ட முகேஷ் அம்பானி, தன்னையும் மீறி தேம்பி தேம்பி அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ