Homeசெய்திகள்இந்தியாசென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?

சென்னை–பெங்களூரு எக்ஸ்பிரஸ்வேக்கு புதிய திருப்பம்! தமிழகப் பகுதியில் மீண்டும் டெண்டர் – பணிகள் விரைவில் தொடங்குமா?

-

- Advertisement -

சென்னை–பெங்களூரு இடையேயான பயண நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் பெங்களூரு–சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களாக முடங்கியிருந்த அரக்கோணம்–காஞ்சிபுரம் பகுதியை முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தற்போது புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது.

we-r-hiring

25.5 கி.மீ. சாலைக்கு ₹633 கோடி!

அரக்கோணம் அருகே கி.மீ. 204.500-ல் தொடங்கி காஞ்சிபுரம் பகுதியில் கி.மீ. 230 வரை செல்லும் 25.5 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகளுக்காக ₹633.12 கோடி மதிப்பில் புதிய EPC டெண்டர் விடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் புதிய ஒப்பந்ததாரர் பணிகளை 18 மாதங்களில் முடிக்க வேண்டும். அதன்பிறகு 5 ஆண்டுகள் பராமரிப்பு பொறுப்பும் வழங்கப்படும்.

ஏன் பணிகள் நின்றன?

இந்தப் பகுதியில் ஏற்கனவே சுமார் 53% பணிகள் முடிந்திருந்த நிலையில், 2025 மே மாதம் முந்தைய ஒப்பந்ததாரர் நிதி நெருக்கடியை காரணம் காட்டி பணிகளை நிறுத்தினார். அப்போது 11.03 கி.மீ. அளவிலான பணிகள் நிறைவடைந்திருந்தன.

இதையடுத்து ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர NHAI நடவடிக்கை எடுத்தது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்ற நிலையில், தற்போது புதிய டெண்டர் மூலம் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கை வேகமெடுத்துள்ளது.

முக்கிய கட்டமைப்புகள் இடம்பெறும்

இந்த 25.5 கி.மீ. பகுதியில் சாலை அமைப்பது மட்டுமின்றி, 9 பெரிய பாலங்கள், ஒரு ரயில்வே மேம்பாலம், 2 Grade Separators, 2 சிறிய பாலங்கள், 18 Underpasses மற்றும் 44 Box Culverts உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புப் பணிகளும் உள்ளன.

முழு எக்ஸ்பிரஸ்வே எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

பெங்களூரு–சென்னை எக்ஸ்பிரஸ்வேயின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன அல்லது இறுதிக்கட்டத்தில் உள்ளன. தமிழகத்தில் குடிபாலா–வாலாஜாபேட்டை பகுதி 99% மற்றும் வாலாஜாபேட்டை–அரக்கோணம் பகுதி 98% பணிகள் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்–ஸ்ரீபெரும்புதூர் பகுதி சுமார் 90% நிறைவடைந்துள்ளது.

இதனால், அரக்கோணம்–காஞ்சிபுரம் பகுதியே முழு எக்ஸ்பிரஸ்வேயை இணைக்கும் முக்கியமான கடைசி தடைகளில் ஒன்றாக உள்ளது.

புதிய டெண்டர் செயல்முறை முடிந்து பணிகள் தொடங்கினால், சென்னை–பெங்களூரு இடையேயான அதிவேக சாலை இணைப்பு திட்டம் மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் மணிப்பூர் இசைக் கலைஞர் கொடூரக் கொலை: வடகிழக்கு மாநிலத்தவர் பாதுகாப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

MUST READ