spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு

-

- Advertisement -

ஆந்திராவில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏய்பட்டுள்ளது. இருவர் பலி ஆகியுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்

ஆந்திராவில்  பட்டாசு ஆலையில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு

we-r-hiring

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உண்டராஜவரம் மண்டலம் சூர்யாறுபாலம் கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் மையத்தில் தீபாவளி என்பதால் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கு பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

ஆந்திராவில்  பட்டாசு ஆலையில் தீ விபத்து - இருவர் உயிரிழப்புஇந்நிலையில் திடிரென மாலை 3.30 மணிக்கு பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியது. இதில் ஆலை முற்றிலும் எரிந்து சேதமான நிலையில் இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஐந்து பெண்கள் பலத்த காயமடைந்தும், பத்துக்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

ஆந்திராவில்  பட்டாசு ஆலையில் தீ விபத்து - இருவர் உயிரிழப்பு விபத்து நடந்த உடன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி!

MUST READ