மத்திய அமைச்சரவையின் செயலாளர் ராஜிவ் கவுபாவின் பதவிக்காலம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சந்தன மரத்தினால் ஆன சிற்பத்தை பிரதமருக்கு பரிசளித்த முதலமைச்சர் சித்தராமையா!
மத்திய உள்துறைச் செயலாளராக இருந்த ராஜிவ் கவுபா, கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30- ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அவர், தலா ஓராண்டு வீதம் மூன்று முறை அவருக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவருக்கு மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆளும் கட்சியினர் நகரில் பேனர்களை குவித்ததால் மக்கள் அதிருப்தி!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான ராஜிவ் கவுபா, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து பயங்கரவாதத் தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.