spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமுன்பு ‛பாரத் ஜோடோ' இனி ‛பாரத் டோஜோ': ராகுல் காந்தி

முன்பு ‛பாரத் ஜோடோ’ இனி ‛பாரத் டோஜோ’: ராகுல் காந்தி

-

- Advertisement -

முன்பு ‛பாரத் ஜோடோ' இனி ‛பாரத் டோஜோ ': ராகுல் காந்தி

முன்பு ‛பாரத் ஜோடோ’ இனி ‛பாரத் டோஜோ’ என தனது அனுபவத்தை பகிர்ந்த ராகுல். 

பாரத் ஜோடோ யாத்திரையின் போது, தற்காப்பு கலை பயிற்சி பெற்ற வீடியோவை வெளியிட்ட ராகுல், விரைவில் பாரத் டோஜா யாத்திரையை விரைவில் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். டோஜோ என்பதற்கு தற்காப்பு கலைக்கான பயிற்சிக்கூடம் என பொருள்.

we-r-hiring

‛எக்ஸ் ‘ சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்ட அந்த வீடியோவில் ஜப்பானின் ஐகிடோ மற்றும் பிரேசிலின் ஜியு – ஜிட்சு தற்காப்பு கலையை கற்றுக் கொள்வதுடன், அதனை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றனர். அப்போது, ஐகிடோவில் கருப்பு பெல்ட் எனவும், ஜியு – ஜிட்சுவில் நீல நிற பெல்ட் எனவும் கூறுகியுள்ளார்.

https://x.com/RahulGandhi/status/1829038570402701566

இத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் ,” பாரத் ஜோடோ ஒற்றுமை நீதிப் பயணத்தின் போது ஆயிரக்கணக்கான கி.மீ., பயணம் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் தங்கும் முகாமில் தினமும் மாலையில் ஜப்பானியர்களின் தற்காப்புக் கலையான ஜியு – ஜிட்சு பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தோம். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாங்கள் தங்கியிருந்த நகரங்களைச் சேர்ந்த இளம் தற்காப்புக் கலைஞர்கள் ஒன்றிணைந்து எங்களுக்கு உதவினர்.

முன்பு ‛பாரத் ஜோடோ' இனி ‛பாரத் டோஜோ ': ராகுல் காந்தி

மேலும், தியானம், ஜியு-ஜிட்சு, அயிகிடோ ஆகியவற்றுடன் வன்முறையற்ற தீர்வு தொழில்நுட்பத்தை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதே எங்களின் நோக்கம் எனவும் வன்முறையை மென்மையாக மாற்றுவதன் மதிப்பை அவர்களிடம் விதைப்பதையும் நோக்கமாக கொண்டோம். இரக்கமுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான கருவிகளை அவர்களுக்கு வழங்கினோம். தேசிய விளையாட்டு நாட்களில், உங்களில் சிலருக்கு இந்த கலை பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில், எங்களது அனுபவத்தை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தெலங்கானா: ஏரி ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி –  முதல்வரின் சகோதரர் வீட்டை இடிக்க நோட்டீஸ் 

கடந்த செப்டம்பர் 2022 முதல் ஜனவரி 2023 வரையிலும், பிறகு ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாரத் டோஜோ யாத்திரையை விரைவில் துவங்க உள்ளேன் என்று அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.

MUST READ