சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை – கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளது. இதில் 3 வண்டிகளுக்கு திருவள்ளூர் நிறுத்தம் கொடுக்க பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல காலம் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, நாளை (நவ- 15) மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை – கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்க உள்ளது.
இருமார்க்கமாகவும் தலா 9 சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு திருப்பூர், போத்தனூர், பாலக்காடு உள்பட பல்வேறு நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவித்துள்ளனர்.
ரயில்கள் விபரம்:
சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 19-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் இரவு 11.20 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06111) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து நவம்பர் 20-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை புதன்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06112) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.