
ஜம்மு- காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலை குலாம் நபி ஆசாத் மறுத்துள்ளார்.

“மக்களின் குரலை எதிரொலிக்கும் மன்றம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். கட்சியின் நிறுவன தினத்தையொட்டி, நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய குலாம் நபி ஆசாத், ஜம்மு- காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநராக தாம் ஆக போவதாக ஒரு வதந்தி உலவுகிறது என்றும், இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
“மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது”- அண்ணாமலை அதிரடி!
தாம் காஷ்மீருக்கு வேலைத் தேடி வரவில்லை என்று கூறிய அவர், மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளதாகவும் கூறினார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது மாபெரும் தவறு என்றும், காஷ்மீரின் சுற்றுலாத் துறை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியும் என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.