Homeசெய்திகள்இந்தியா5,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை!

5,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை!

-

- Advertisement -

 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறப்பு!
File Photo

5,000 கனஅடி தண்ணீரைத் திறந்து விட கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுப் பரிந்துரைச் செய்துள்ளது.

அரசுப் பேருந்தில் பயணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்! (வைரலாகும் புகைப்படம்)

காவிரி நதிநீர் பங்கீடு பற்றி டெல்லியில் நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டம் இன்று (செப்.12) நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை அதிகாரி சுப்பிரமணியன் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டார்.

அப்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு காவிரியில் நீரைத் திறந்துவிட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், குறுவைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தண்ணீரின்றித் தவித்து வருகின்றனர்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மா சாதனை!

அதைத் தொடர்ந்து, தினமும் 5,000 கனஅடி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு திறந்துவிட கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.

MUST READ