
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, அரசுப் பேருந்தில் பயணித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகோடா பேருந்து நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு பேருந்தில் பயணம் செய்ய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, அது தொடர்பான புகைப்படங்களை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டத்தை ரத்துச் செய்யக்கோரி தனியார் போக்குவரத்து அமைப்புகள் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆட்டோ, கேப், டேக்ஸி என தனியார் போக்குவரத்து எதுவும் இயங்காத நிலையில், அனில் கும்ப்ளே, அரசுப் பேருந்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜியின் பிணை மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்!
அவரது பதிவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள ரசிகர்கள் பொதுப்போக்குவரத்தை ஆதரித்ததற்கு நன்றி என பதிவிட்டு வருகின்றனர்.