Homeசெய்திகள்இந்தியாதவறான எண்ணத்தில் நெருங்கினால் மின்சாரத்தால் தாக்கும் செருப்பு! விநோத கண்டுபிடிப்பு

தவறான எண்ணத்தில் நெருங்கினால் மின்சாரத்தால் தாக்கும் செருப்பு! விநோத கண்டுபிடிப்பு

-

கர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்,பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் கொண்ட பிரத்யேக காலணியை உருவாக்கி அசத்தி உள்ளார்.

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி பிரதார் பாலியல் தொல்லை தரும் நபர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் கொண்ட பிரத்யேக காலணியை அந்த பள்ளி மாணவி உருவாக்கி அசத்தி உள்ளார். ஒரு குற்றவாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முற்படும்போது, பிரத்யேக காலணிகளால் அவர்களை உதைக்க முடியும் என்றும் விஜயலட்சுமி விளக்கினார்.

இந்த காலணிகள் குற்றவாளியை மின்சாரம் தாக்கி கொல்லும் என்றும் பேட்டரிகளின் உதவியுடன் காலணி வழியாக மின்சாரம் செல்கிறது என்றும், அது குற்றவாளிகளை எதிர்த்துப் போராட பெண்களுக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் கூறுகின்றனர். இதுனுடைய மற்றொரு அம்சம் என்வென்றால் இது உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் அம்சத்தையும் கொண்டுள்ளது, இது பாலியல் தொல்லைக்கு ஆளாகும் மாணவி தாம் எங்கே இருக்கிறோம் என அவரது பெற்றோருக்கு இருப்பிடத்துடன் கூடிய எச்சரிக்கை மணியை அனுப்பி விடும் என்றும் கூறினார்.

MUST READ