திருப்பதியில் 2 வயது சிறுவன் கடத்தல்- போலீஸ் விசாரணை
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ராமசாமி சந்திரசேகர் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார். ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு நேற்று இரவு மீண்டும் சென்னை செல்ல அதிகாலை 2 மணிக்கு திருப்பதி பேருந்த் நிலையத்துக்கு வந்துள்ளார். சென்னை பேருந்துகாக பிளாட்பார்ம் எண் மூன்றில் காத்திருந்தனர். சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்த சேர்ரில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
இரண்டரை மணி அளவில் அருகில் இருந்த 2 வயது மகன் அருள்முருகன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து பேருந்து நிலையம் முழுக்க தேடி பார்த்தனர். ஆனால் சிறுவன் அருள் முருகன் காணவில்லை. பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை சந்திப்பில் உள்ள கேசஸ் ஓட்டல் நோக்கி அவர் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் சிறுவனை மர்ம நபர் கொண்டு செல்வது பதிவாகி உள்ளது. சந்திரசேகர் அளித்த புகாரை அடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.