நாடாளுமன்றத் தாக்குதல் நினைவுத் தினமான இன்று (டிச.13) நடந்த அத்துமீறல் சம்பவத்தால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (டிச.13) மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு பேர் திடீரென மாடத்தில் இருந்து குதித்து மேஜை மீது தாவி ஓடிய நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையில் நுழைந்த இருவரும் ‘சர்வாதிகாரம் கூடாது’ என முழக்கமிட்டதால் அவையில் பரபரப்பு நிலவியது.
மக்களவையில் பாதுகாப்பு வளையங்களை மீறி நடந்த சம்பவத்தையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. உள்ளே நுழைந்த இருவரும் தங்கள் காலணியில் மறைத்து வைத்திருந்த கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து மேஜை மீது ஓடிய நபர்களை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மடக்கிப் பிடித்தனர். தடைச் செய்யப்பட்ட பொருட்களுடன் மக்களவையில் நுழைய முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அன்று சிம்பாவுக்கு குரல்… இன்று ஏலியனுக்கு குரல்… அசத்தும் சித்தார்த்..
22 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்த அதே நாளில் அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.