spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

-

- Advertisement -

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரெய்சியின் துயரமான மறைவு ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த இப்ராஹிம் ரெய்சி மேற்கொண்ட பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அதிபர் ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் ஆவார். இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவருடைய மறைவிற்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ