Homeசெய்திகள்இந்தியாவாக்குச்சீட்டுகள் அச்சடிப்பு- தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை!

வாக்குச்சீட்டுகள் அச்சடிப்பு- தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை!

-

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

அந்த சுற்றறிக்கையில், “வேட்பாளர் பட்டியல் இறுதிச் செய்யப்பட்டதும் தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகளைத் தயாரிக்கும் பணியைக் கண்காணிக்க உதவித் தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். அச்சகத்தில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் தபால் வாக்குச் சீட்டுகள் கொண்டு செல்லப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.148.54 கோடி நிதி ஒதுக்கீடு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்று (மார்ச் 16) பிற்பகல் 03.00 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

MUST READ