எஸ்.ஐ.ஆர். பணிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (Special Intensive Revision – SIR) 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் ஒரு சிறப்பு திருத்தத்தை நடத்த அதிகாரம் பெற்றுள்ளது என்று வாதிட்டாா்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 11 வகை ஆவணங்களை சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியுமா? என கேள்வி எழுப்பினர். மேலும், ஒரே முகவரியில், ஒரே பெற்றோரின் குழந்தைகளாக 200-க்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பதிவுகள் காட்டுகின்றன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
வாக்காளர் பட்டியல்களை திருத்துவதற்கான நடத்தை என்பது, நீதிக்கான கொள்கைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. எஸ்.ஐ.ஆர். பணி தொடர்பான வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு ஒத்திவைத்தது.
இபிஎஸ் தலைமையிலான கூட்டணி… ஊழல் அரசான திமுகவை வீழ்த்தும் – பியூஸ் கோயல்


