Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!

-

 

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!
Video Crop Image

திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருடப்பட்ட நிலையில், ஜி.பி.எஸ். மூலம் பேருந்தை காவல்துறையினர் மீட்டனர்.

“கேங்மேன் பணி கோரி போராட்டம்- வழக்கை வாபஸ் பெறுக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

உச்சக்கட்டப் பாதுகாப்பு உள்ள திருப்பதி திருமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அதிகாலையில் மின்சார பேருந்தைத் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து திருப்பதி திருமலை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மின்சார பேருந்தில் இருந்த ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு செய்த காவல்துறையினர், நாயுடுபேட்டை அருகே சாலையோரத்தில் பேருந்து நிற்பது தெரிய வந்தது. இதையடுத்து, பேருந்தை மீட்ட காவல்துறையினர், தப்பியோடிய நபரைத் தேடி வந்தனர்.

“சோதனைகளைக் கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் அல்ல”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

மின்சார பேருந்தில் சார்ஜ் காலியானதால், பேருந்தை நடுவழியிலேயே அந்த நபர் விட்டுச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

MUST READ