Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி லட்டு விவகாரம் - ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்

திருப்பதி லட்டு விவகாரம் – ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விளக்கம்

-

- Advertisement -

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே தங்கள் மீது குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்

திருப்பதியில் லட்டு தயாரிக்க தானியங்கி இயந்திரம்

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுப்பதாக தெரிவித்தார். திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு பொய் புகார் அளித்துள்ளதாக குற்றம்சாட்டிய ஜெகன்மோகன், கோவிலுக்கு வாங்கப்படும் நெய் உரிய பரிசோதனைக்கு பிறகே பயன்படுத்துவது கட்டாய நடைமுறை என்றும், 6 மாத டெண்டரில் தரம் பார்த்து வாங்குவதில் தங்கள் அரசு, எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
File Photo

உலகத்தரம் வாய்ந்த தரக்கட்டுப்பாட்டுடன் இயங்கி வரும் ஒரு உலகின் முதன்மையான கோவில் பற்றி ஒரு முதலமைச்சர் இப்படி அவதூறு கூறலாமா? என கேள்வி எழுப்பியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, ஜூலை 12ஆம் தேதி சாம்பிள் எடுக்கப்பட்ட தினத்தில் சந்திரபாபு நாயுடுதான் முதலமைச்சராக இருந்ததாகவும், டெஸ்ட் எடுத்தபின் இத்தனை நாட்கள் அவர் மவுனமாக இருந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

சந்திரபாபு நாயுடு வெற்றி ; ஜெகன் மோகன் ராஜினாமா

ஆந்திராவில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை திசை திருப்பவே தங்கள் மீது குற்றச்சாட்டை சுமத்துவதாக தெரிவித்துள்ள ஜெகன்மோகன், கடவுளின் பெயரால் தற்போது அரசியல் செய்வதாகவும், சந்திரபாபு நாயுடு 100 நாள் ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே நெய் கலப்பட புகார் முன்வைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் வெள்ள பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்டவற்றை திசை திருப்ப முயல்வதாகவும், முறையான முன்னேற்பாடுகள் செய்யாததால் வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

MUST READ