Homeசெய்திகள்இந்தியாமக்களவையில் மழை பாதிப்பு குறித்து டி.ஆர்.பாலு கதறல் - செவிசாய்ப்பாரா பிரதமர்..

மக்களவையில் மழை பாதிப்பு குறித்து டி.ஆர்.பாலு கதறல் – செவிசாய்ப்பாரா பிரதமர்..

-

- Advertisement -

தமிழ்நாட்டின் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு பட்டியலிட்டு கதறினார். உடனடியாக மத்திய அரசு உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற மக்களவையில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிலை குறித்தும் ஒட்டுமொத்த சேதத்தின் அளவு குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது கனத்த இதயத்தோடு தமிழகத்தின் நிலை குறித்து மக்களவையில் தெரிவிக்க விரும்புவதாகவும், இயற்கை பேரிடர் காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாகவும் குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலமாக மழை வெள்ள நீரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மூழ்கியுள்ளதாகவும், இன்னும் சொல்லப்போனால் பயிர்கள் அழிந்துவிட்டது என கூறியுள்ளார். இவைத்தவிர மழை வெள்ளத்தின் காரணமாக 721 வீடுகள் இடிந்துள்ளது. 963 கால்நடைகள் இதுவரை உயிரிழந்துள்ளது. ஆயிரக்கணக்கான சாலைகள் பாலங்கள் சேதம் அடைந்துள்ளது. கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள 417 நீர் தேக்க தொட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் வழங்கக்கூடிய 977 டிரான்ஸ்பார்மர்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக நலக்கூடங்கள் பஞ்சாயத்து கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை கவனத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தமிழகத்திற்கு மதிப்பீட்டு குழுவை அனுப்ப வேண்டும் எனவும் மதிப்பீட்டு குழு தமிழகத்தின் நிலையை ஆராய்ந்து உடனடியாக தமிழகத்திற்கு நிவாரண தொகையை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மழை நிவாரணம்… புதுவையில் ரூ.5 ஆயிரம்: தமிழகத்திற்கு வெறும் ரூ.2 ஆயிரமா..? கோபத்தில் மக்கள்!

MUST READ