spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"சமச்சீரற்ற இந்தியாவாக உள்ளது"- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

“சமச்சீரற்ற இந்தியாவாக உள்ளது”- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

"சமச்சீரற்ற இந்தியாவாக உள்ளது"- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

we-r-hiring

பிரிட்டிஷ் காலத்தைவிட தற்போதைய இந்தியா சமச்சீரற்ற நிலையில் உள்ளதாக ராகுல்காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு?

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 8 மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைச் செய்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல்காந்தி, “தமிழகத்தையும், தமிழ் மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழகத்தை விரும்புவதால் தான் எனது யாத்திரையை நான் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினேன். தமிழக கலாச்சாரம், பண்பாடு என்னை கவர்ந்துள்ளது; என் மீது தமிழக மக்கள் அன்பை பொழிந்துள்ளனர்.

எப்போதெல்லாம் இந்தியாவைப் புரிந்து கொள்ள விரும்புகிறேனோ, அப்போதெல்லாம் தமிழகத்தைப் பார்க்கிறேன். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் தமிழகத்தின் ஆளுமைகள். இரண்டு தத்துவங்களுக்கிடையே நடைபெறும் மோதல் இந்த தேர்தல். தமிழ் மொழி மீதான தாக்குதலை தமிழர்கள் மீதான தாக்குதல் என்றே பார்க்கிறேன். தமிழ் மொழி, கலாச்சாரம் மீது தாக்குதல் நடைபெறுகிறது. அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் வேண்டும்.

தோல்வி பயத்துக்குள்ளான பாஜக… தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது – முத்தரசன்!

இந்தியாவில் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் காக்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. நாட்டின் 25 பெரும் பணக்காரர்கள் 70% மக்களின் பணத்தை வைத்துள்ளனர். பிரிட்டிஷ் காலத்தைவிட தற்போதைய இந்தியா சமச்சீரற்ற நிலையில் தற்போதைய இந்தியா சமச்சீரற்ற நிலையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ