ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சுங்கவரி வெகுவாக குறைக்கப்பட்ட தால் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற ஆபரன பொருட்களின் விலை வெகுவாக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரி விகிதத்தை 15 % என்பதிலிருந்து 6% என்றும் பிளாட்டிணாத்திற்கு சுங்க வரி 6.4% என்றும் குறைக்கப்பட்டது.
இந்த வரி விகிதம் மாற்றத்தால் தங்கத்தின் விலையானது சரிந்து வருகிறது. தற்போதைக்கு 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.15 விலை குறைந்து 6,810 ஆகவும், ஒரு சவரன் ரூ 54,480க்கும் விற்கப்படுகிறது. அதே போல் வெள்ளியின் விலையும் 40 பைசா குறைந்து கிராம் ஒன்று ரூ.95.60-க்கு விற்கப்படுகிறது.
இந்த வரி விகிதம் மாற்றத்தால் தங்கத்தின் விலையானது சரிந்து வருகிறது. சுங்க வரி குறைந்ததையடுத்து தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2080 குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று காலை ரூ.54,480க்கு விற்பனையானது. தற்போது ரூ.52,400 க்கு விற்பனையாகிறது. இன்று காலை ரூ.6,810க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம் தற்போது ரூ.260 குறைந்து ரூ.6,550 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.6825 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதிப்பற்றாக்குறை 4.9% – 4.5% ஆக குறைக்க இலக்கு – நிர்மலா சீதாராமன்
இருப்பினும் தங்கம் விலை அடுத்த இரண்டு மணி நேரத்தில் இன்னும் வேகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.