Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மலேரியா காய்ச்சலையும் குணப்படுத்தும் கோரைக்கிழங்கின் அற்புத குணங்கள்!

மலேரியா காய்ச்சலையும் குணப்படுத்தும் கோரைக்கிழங்கின் அற்புத குணங்கள்!

-

- Advertisement -

மலேரியா காய்ச்சலையும் குணப்படுத்தும் கோரைக்கிழங்கின் அற்புத குணங்கள்!கோரைக்கிழங்கு என்பது நமக்கு அருகில் மிக எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகையாகும். பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட கோரைக்கிழங்கு எவ்வித காய்ச்சலையும் குணமாக்கும் தன்மை கொண்டது. அந்த வகையில் மலேரியா காய்ச்சலையும் குணப்படுத்தக்கூடிய திறன் இந்த கோரைக்கிழங்கில் இருக்கிறது. மேலும் மாதவிலக்கை தூண்டவும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கவும் இந்த கோரைக்கிழங்கு பயன்படுகிறது.

பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்குகிறது. வெள்ளைப் போக்கு, அடிவயிற்று வலி, கருப்பை புண்களை குணப்படுத்தும் சிறந்த மருந்தாக கோரைக்கிழங்கு பயன்படுகிறது.

கோரைக்கிழங்கு தோல் நோய்களை குணப்படுத்தவும் வியர்வை நாற்றத்தை போக்கவும் உதவுகிறது.

நாட்டு மருந்து கடைகளில் காய வைத்த கோரைக்கிழங்கு மற்றும் கோரைக்கிழங்கு பொடி ஆகியவை கிடைக்கும்.மலேரியா காய்ச்சலையும் குணப்படுத்தும் கோரைக்கிழங்கின் அற்புத குணங்கள்!

தோலுக்கு மென்மை அளிக்கவும் பொலிவு கொடுக்கவும் உடல் வலியை போக்கவும் இந்தக் கோரைக்கிழங்கு பயன்படுகிறது.

இந்தக் கோரைக்கிழங்கினை பொடியாக்கி அதில் கஸ்தூரி மஞ்சள் மற்றும் சந்தன பொடி ஆகியவற்றுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகச்சுருக்கங்கள் மறையும். வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ