spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அறுச்சுவை உணவு!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அறுச்சுவை உணவு!

-

- Advertisement -

அறுசுவைக்கும், நம் உடலின் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உலகில் வேறு எந்த நாட்டு உணவு முறைகளிலும், ‘அறுசுவை உணவு, அறுசுவை விருந்து’ என்ற வார்த்தைகளே கிடையாது. இவை, நம் பாரம்பரியத்துக்கே உரியவை என்ற பெருமையை பெற்றிருக்கிறது. உடலுக்குத் தேவையான குறிப்பிட்ட சுவை கிடைக்காமல் போனாலோ அல்லது அந்தச் சுவை தேவைக்கு அதிகமாய் இருந்து, மற்றொரு சுவையில் பற்றாக்குறை ஏற்பட்டாலோ, அது நம் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அறுச்சுவை உணவு! ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. எந்த சுவைக்கு என்னென்ன பலன் என்று பார்ப்போம்:

இனிப்பு
இது, உடலுக்கு சக்தியைத் தரும்; மூளைக்கு புத்துணர்ச்சியைத் தரும். குறிப்பிட்ட அளவுக்கு இனிப்புச் சுவை இருந்தால், உடல் வனப்பாய் இருக்கும். அதிகரித்தால், ஒருவித கிறுகிறுப்பைத் ஏற்படுத்திவிடும். அளவுக்கு அதிகமாக இச்சுவையை உண்பதால் நமக்கு நீரிழிவு நோய் ஏற்படும்.
புளிப்பு
உடலை தூய்மையாக்கும்; வளர்ச்சிக்கு உதவும். அதிக பசியோடு இருக்கும் போது, புளிப்பு குணமுடைய அதாவது கார்போஹைட்ரேட் உணவான அரிசி உணவுகள் சிறந்தது.
துவர்ப்பு
வயிறு சரியில்லை என்றால், வெந்தயக் கஞ்சி வைத்து சாப்பிட பலரும் கூறுவதுண்டு. மாதுளை, நெல்லிக்காய், வாழைப்பூ, தேங்காய்ப் பால், கறிவேப்பிலை, அத்திக்காய், கடுக்காய் இதெல்லாம் வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடியவை. இவற்றில் இருக்கும் துவர்ப்புச் சுவை தான், புண்கள் ஆற காரணமாக அமைகிறது. பால் வடியும் காய்களான பப்பாளி, அத்தி, மாங்காய், பலாக்காய் இவற்றில் கூட துவர்ப்புச் சுவை உள்ளது.
கசப்பு
வெந்தயம், கடுகு, தனியா, பாகற்காய், அவரைக்காய், கத்தரிக்காய், சுண்டைக்காய், மிதி பாகல் போன்றவை, கசப்புச் சுவை உடையவை. நல்ல வாசனை தரும் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா இவற்றில் கசப்பு சுவையும் கலந்திருக்கும். கசப்பு நம்முடைய ஜீரண நீர்களைத் தூண்டும். நரம்பை வலுவேற்றும். மூளைத் திறனை அதிகரிக்கும். நரம்பு வலி இருந்தால், கசப்புச் சுவை உணவை உட்கொண்டால், வலி போகும். உடலுக்கான தேவையான நோய் எதிர்ப்புத்திறனை கசப்பு சுவை தரும்.
உவர்ப்பு
வெறும் உப்பு மட்டும் உவர்ப்புச் சுவைக்குள் வராது. தாது உப்புகள் எல்லாமே உவர்ப்புச் சுவைக்குள் தான் வரும். சுரைக்காய், புடலை, பீர்க்கன்காய், பூசணி மாதிரியான நீர்க்காய்களில் தாது உப்புகள் இருக்கின்றன. எதெல்லாம் சாறு தருகிறதோ அதெல்லாம் உவர்ப்புத்தன்மை உடையவை. உவர்ப்பு, எலும்பை வளர்க்கும். ரத்த அணுக்கள் உருவாக, எலும்பு மஜ்ஜை தேவை. அந்த மஜ்ஜை சீராய் இயங்க உவர்ப்புச் சுவை மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.
காரம்
மிளகு, மிளகாய், கீரை, வாழைத்தண்டு இவையெல்லாம் காரச்சுவை உடையவை. எதில் எல்லாம் நார்ச்சத்து உள்ளதோ, அதெல்லாம் காரச்சுவை உடையவை. ஜீரண உறுப்புகளை சுத்தம் செய்ய இறைவன் படைத்த அற்புத சுவை, காரம். அது ஒரு, ‘நேச்சுரல் கிளீனர்!’ காரச் சுவையில் சத்து ஏதும் கிடையாது. ஆனால், அது, குடல் செரிமான நீர்களை நன்கு தூண்டி விடுகின்றன. நார்ச்சத்து அல்லது காரச்சத்து பற்றாக்குறையால் பெரிய அளவில் ஜீரண உறுப்புகளில் கோளாறு ஏற்படுகின்றன.

we-r-hiring

சமையலை ருசிக்கத் தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும், இங்கே சொன்ன அறுசுவைகளின் குணங்களை அறிந்து சாப்பிட்டால், நிச்சயம் ஆரோக்கியமான உடலை பெறலாம்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகளும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்!

 

MUST READ