Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி!

மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி!

-

- Advertisement -

மாரடைப்பு ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியது என்னென்ன? என்பதைப் பற்றி பார்க்கலாம்.மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி!

இன்றுள்ள காலகட்டத்தில் வயதானவர்களுக்கு மட்டுமல்லாமல் சிறு வயது குழந்தைகளுக்கும் கூட மாரடைப்பு ஏற்படுவதை காண முடிகிறது. அதுமட்டுமில்லாமல் ஆண்கள், பெண்கள் இருபாலருமே மாரடைப்பினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்படுவது போல் உணர்ந்தால் (அதாவது உங்களுக்கோ, வேறு யாருக்கோ) உடனடியாக 108 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸை வரவழைக்க வேண்டும்.மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி!

மேலும் மாரடைப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கலாம். ஆனால் அதிக அசைவுகளை தவிர்த்து விட வேண்டும்.

அதன்படி உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் பதட்டப்படாமல் அமைதியாக நிலையான தரையில் அமர்ந்து ஓய்வெடுக்க வேண்டும். மேலும் இறுக்கமான ஆடைகளை தளர்த்த வேண்டும். வேறொருவராக இருந்தால் அந்த நபரை படுக்க வைத்து சட்டையின் மேல்பட்டனை தளர்த்தி விட வேண்டும்.

பின்னர் அந்த நபர் காற்றை சுவாசிக்க வழிவகை செய்து அவர் இருக்கும் இடத்தை காற்றோட்டமாக விட வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை சுற்றி கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரால் மூச்சு விட முடிகிறதா என்பதை மூக்கின் அருகில் காதுகளை வைத்து உறுதி செய்ய வேண்டும்.மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி!

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்க முடியாத நிலையில் இருப்பின் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும்.

இருப்பினும் அவருக்கு வாய்வழி மூச்சு இல்லை என்றாலும், மயக்கம் அடைந்தாலும் CPR – மாரடைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அடுத்தபடியாக 300mg அஸ்பிரினை மெல்ல மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இது மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே செய்ய வேண்டும். அதேபோல் நைட்ரோகிளிசரின் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இதனையும் மருத்துவர் ஏற்கனவே பரிந்துரைத்து இருந்தால் இம்மாத்திரையை நாக்கிற்கு அடியில் வைக்கலாம்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ