பச்சைப்பயிறு லட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு – 150 கிராம்
வெல்லம் – 50 கிராம்
ஏலக்காய் – 1
தேங்காய் – கால் மூடி
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
பச்சை பயிறு லட்டு செய்வதற்கு முதலில் பச்சை பயிறை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த பச்சை பயிறை குக்கரில் போட்டு ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பயிறு வெந்து வந்த பிறகு ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதே சமயம் வெல்லத்தினை சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்து சூடாக்கி கரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த பச்சை பயிறுடன் வெல்லம், துருவ தேங்காய், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிசைந்ததை உருண்டையாக பிடித்துக் கொண்டு, அந்த உருண்டையை தேங்காயில் பிரட்டி அல்லது உருண்டை மேல் துருவிய தேங்காயை தூவி பரிமாற வேண்டும்.
சுவையான பச்சை பயிறு லட்டு ரெடி.
இந்த பச்சை பயிறு உருண்டையை குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் கொடுத்து வரலாம். பச்சை பயிறு வகைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.