Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடனே இதை செஞ்சு வியர்வை நாற்றத்திற்கு குட் பை சொல்லுங்க!

உடனே இதை செஞ்சு வியர்வை நாற்றத்திற்கு குட் பை சொல்லுங்க!

-

- Advertisement -

வியர்வை நாற்றத்திற்கு குட் பை சொல்ல உடனடியாக இந்த டிப்ஸை பின்பற்றி பாருங்கள்.

தினமும் குளிக்கும் சமயத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை தண்ணீரில் கலந்து கால் மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் எலுமிச்சை கிருமிகளை அழித்து மணமூட்டியாகவும் இருக்கும்.உடனே இதை செஞ்சு வியர்வை நாற்றத்திற்கு குட் பை சொல்லுங்க!

அதுபோல நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சந்தன கட்டையை வாங்கி தினமும் இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் சந்தனத்தை நீர் விட்டு குழைத்து அதனை அக்குளில் தடவி வர வியர்வை நாற்றம் நீங்கும். ஒரிஜினல் சந்தனம் நல்லது. இதனை பொடியாக்கி வைத்து ரோஸ் வாட்டரில் கலந்தும் பூசி வரலாம்.

மஞ்சள் என்பது சிறந்த கிருமி நாசினி. எனவே குளித்து முடித்த பின் கிழங்கு மஞ்சளை தண்ணீரில் குழைத்து பூசி வரவேண்டும். இதனை வெளியில் செல்லும்போது பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் சமயங்களில் பயன்படுத்தி வரலாம். குறிப்பாக இரவு நேரங்களில் பயன்படுத்தலாம். இது கெட்ட பாக்டீரியாக்களை அழித்து கெட்ட வாடையை குறைக்கும்.உடனே இதை செஞ்சு வியர்வை நாற்றத்திற்கு குட் பை சொல்லுங்க!

தினமும் குளிப்பதற்கு முன் கெட்டியான தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து அதனை அக்குளில் பூசி, அரை மணி நேரம் காய வைத்து பின் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் குறையும். இம்முறையை பயன்படுத்தும் போது சோப்பை தவிர்த்து விட்டு பாசிப்பருப்பு, கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம்.

இம்முறைகளை எல்லாம் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ